பாதி வயிறு
முழு வயிறாகி
சுகமாய் தூங்குது பிள்ளை
இருபது கிலோ
இருபதே ரூவா
மீதிக்கு செலவும் போக
பொழுது கழியுது சுகமா
ஒத்த ரூபா ரேஷனால்
இன்னிக்கு ஒண்ணாம் தேதி
இப்பவே போனா
வந்து சமச்சிடலாம்
பிள்ள பள்ளி விட்டு
பசிச்சு வரதுக்குள்ள
ஒரு கூட்டம் நிக்குதே வரிசைல
ஒருவா கஞ்சித்தண்ணி
குடிக்காம வந்திட்டேன்
அட.. பெரியவூட்டு ஐயா நிக்காரே!
என்னைய்யா ரேஷன்கடைல காணுது?
"வீட்ல புதுசா ரெண்டு நாய்ங்க
வாங்கி இருக்கேன்ல"
வரிசையில் அரிசி வாங்க
நின்றவர்களுடன் சேர்ந்து
ரேஷன் தின்னும்
நானும் ஒரு
நாயாகிப் போனேன்...
Saturday, March 20, 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment