Showing posts with label வைகோ. Show all posts
Showing posts with label வைகோ. Show all posts

Sunday, May 8, 2011

வைகோவின் தொண்டன்

காணிக்கைக் கேட்காத
கண் கண்ட கடவுள்
அம்மா

நடமாடும்
தெய்வம்
அம்மா

கருவறை உள்ள
கடவுள்
அம்மா

உயிர் தந்த உயிர்

உயிர் வளர்த்த உயிர்
அம்மா

மனதில் அழியாத ஓவியம்
மறக்க முடியாத காவியம்
அம்மா

ஆடுகளும் மாடுகளும் கூட
உச்சரிக்கும் உயர்ந்த சொல்
அம்மா

வாய் பேசாத ஜீவன்களும்
பேசிடும் ஒரே சொல்

அம்மா

மகனின் வாழ்வு ஒளிர்ந்திட
உருகிடும் மெழுகு
அம்மா

உச்சங்களின் உச்சம்
உலகின் உச்சம்
அம்மா

அன்பின் சின்னம்
அமைதியின் திரு உருவம்
அம்மா

திசைக் காட்டும்
கலங்கரை விளக்கம்

அம்மா

கரை சேர்க்கும் தோணி
உயர்த்திடும் ஏணி
அம்மா

நேசம் பாசம் மிக்கவள்
வேசம் அறியாதவள்
அம்மா