Showing posts with label எனது கிறுக்கல்கள். Show all posts
Showing posts with label எனது கிறுக்கல்கள். Show all posts

Sunday, May 9, 2010

எனக்குள்…அழகோடு காதல்.



அழகு

அழகு என்ற வார்த்தையே அழகுதான். என்னைப்பொருத்தவரையில் இயற்கையின் அழகு ரொம்பப் பிடிக்கும். மனதுக்கு எப்போதும் திருப்தி தரக்கூடிய நிரந்தரமான அழகு அது.
பலர் சொல்வதைப்போல பெண்கள் அழகானவர்கள் தான். ஆனால்….(?)
பச்சைப் புல்வெளி, தோகைமயில், அந்திவானம், தனித்த ரயில்பாதை, பரிதிவட்ட வளர்பிறை, ஒற்றைரோஜா, போதிமரம், மழையில் நனையும் மலை, ஜோடிக்கிளிகள் இப்படி எத்தனையோ விடயங்கள் எனக்குள் பரவசமான இன்பத்தை அளித்துக்கொண்டிருக்கின்றன.



காதல்

காதலில் பாதிக்கப்பட்டவர்கள் இப்படிக்கூறுவார்கள்:
கா = காத்திருந்து
த = தவித்து
ல் = ல்லாமல் போவது

காதலில் களிப்பவர்கள் இப்படிக்கூறுவார்கள்
கா = காத்திருந்து
த = தவித்து
ல் = ல்லயித்திருப்பது

காதல் ஒரு மந்திரச்சொல். முன்னேறவும் வைக்கும், முடிச்சுப்போடவும் செய்யும். பொருத்தமான தெரிவை அடிப்படையாகக் கொண்டே அதன் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது.
நீந்தத் தெரிந்தவர்களுக்கு காதல்கடல் ஒரு வாழ்வுலகம். நீந்தத் தெரியாதவர்களுக்கு???
நான் நீந்தக் கற்றுக்கொண்டிருக்கிறேன்.

Saturday, April 24, 2010

அம்மாவுக்காக




எங்கோ பிறந்தவளைப் பற்றி
கவிதை எழுதிவிட்டு
என்னை பிறப்பித்தவளைப் பற்றி
கவிதை எழுதாமல் சென்றுவிடுவேனோ?

உடன் உண்ணப்போறவளைப் பற்றி
கவிதை எழுதிவிட்டு
உணவு இட்டவளைப் பற்றி
கவிதை எழுதாமல் சென்றுவிடுவேனோ?

கைபிடிக்க போகின்றவளைப் பற்றி
கவிதை எழுதிவிட்டு
கைபிடித்து சொல்லிக்கொடுத்தவளைப் பற்றி
கவிதை எழுதாமல் சென்றுவிடுவேனோ?

வாலிபத்தை சுமப்பவளைப் பற்றி
கவிதை எழுதிவிட்டு
வயிற்றில் சுமந்தவளைப் பற்றி
கவிதை எழுதாமல் சென்றுவிடுவேனோ?

உடன் உறங்கப்போறவளைப் பற்றி
கவிதை எழுதிவிட்டு
உறங்க தாளாட்டியவளைப் பற்றி
கவிதை எழுதாமல் சென்றுவிடுவேனோ?

என்னுடன் வாழப்போறவளைப் பற்றி
கவிதை எழுதிவிட்டு
எனக்காக வாழ்பவளைப் பற்றி
கவிதை எழுதாமல் சென்றுவிடுவேனோ


தமிழனாய்...

சிலம்பரசன் சேகுவேரா

காதல் ரோஜாவே



காதலிக்க தெரியாத பெண்ணின் கூந்தலில் இருப்பதை விட ,

காதலிக்க தெரிந்த ஆணின் கல்லறையில் இருப்பது மேலானது …





ஒற்றை சிவப்பு ரோஜாவை
கையில் வைத்துக் கொண்டு
பூ பிடித்திருக்கின்றதா என்றாய்
ஆம் ரோஜாவை ஒரு பூ பிடித்திருக்கின்றது என்றேன்.
வெட்கத்தால் நீ சிவக்க தொடங்கினாய்!
இல்லை இல்லை
ஒரு ரோஜாவை மற்றொரு ரோஜா பிடித்திருக்கின்றது என்றேன்!


தமிழனாய்...

சிலம்பரசன் சேகுவேரா

Sunday, April 18, 2010

ஆட்டோகிராஃப்

நீண்ட நாள் தொடர்பில் இல்லாத ஒரு நண்பன் தனக்கும் மகள் பிறந்த செய்தியைத் தெரிவித்தான். அவனது ஆட்டோகிராஃபை நினைவுபடுத்தி என்ன பெயர் வைத்தாய் என்று கேட்டு கேலி செய்தேன். அதுதான் இக்கவிதைக்கான ஊக்கி. இக்கவிதையை நண்பனின் அனுமதியைப் பெற்றே வெளியிடுகிறேன். நண்பனின் வேண்டுகோளுக்கினங்கி அவனது பெயரை மட்டும் சொல்லவில்லை.


ஆட்டோகிராஃப்

மூண்றாம் வகுப்பில் அனிதா
நான்காம் வகுப்பில் வாசுகி

ஐந்தாம் வகுப்பில் ரோகினி
ஆறாம் வகுப்பில் அஞ்சலி
+1ல் ரம்யா
கல்லூரியில் ரேவதி

2003 ஜனவரி முதல் மே வரை சென்னை இல் தேவி
மே முதல் நவம்பர்- பாரதி
பிறகு மணோன்மணி
மீண்டும் நெய்வேலி இல் ஒரு அனிதா
அடுத்ததாய் மலர்விழி
பின்னர் 2007 மே முதல்
திருமணம் வரை மஹாலக்ஷ்மி!

இதில் யார் பெயரை வைப்பது
என் ஒரே மகளுக்கு!!!


தமிழனாய்...

சிலம்பரசன் சேகுவேரா.

Saturday, April 17, 2010

கனவு காணுங்கள் ...

உங்கள் கனவில் மீனா வந்தால்
நீங்கள் வாழ்வில் வீணா போவீர்கள்..,

சிம்ரன் வந்தால் சீரழிந்து போவீர்கள்..,
சினேகா வந்தால் செத்து போவீர்கள்..,

அசின் வந்தால் அழிந்து போவீர்கள்..,

ஆகையால், கனவு காணுங்கள்

காதலில் தவிக்கும் சந்தியாவைப்
பற்றி அல்ல...

கஷ்டத்தில் தவிக்கும்
இந்தியாவை பற்றி...

ஜெய்ஹிந்த்....


தமிழனாய்...

சிலம்பரசன் சேகுவேரா

Tuesday, April 13, 2010

உன் நினைவுகள்!



உன்னை நினைத்து
இரவு முழுதும்
அழுது முடித்து
உறுதியாய்த்
தீர்மானித்தேன்
உன்னை மறந்து
விடுவதென்று!

உன் நினைவுகளை எங்கேனும்
தொலைத்து விடலாமென
அழுதுகொண்டு
கிளம்பினேன்...

திரையரங்கில்..
நூலகத்தில்..
புத்தக இடுக்கில்..
பேருந்தில்..
அலுவலகத்தில்..
டாஸ்மாக்கில்...
சாலையில் பார்த்த
குழந்தையின் சிரிப்பில்...

எங்கே தொலைப்பதென
அலைந்து திரிந்து
மீண்டும் வீட்டிற்குத்
திரும்பினேன்.

செருப்புகளைக் கழற்றுகையில்
உறைத்தது!
உன் நினைவுகளைக் காணவில்லை!!

மகிழ்ச்சியாய் நுழைந்து
படுக்கையறையைத் திறந்தேன்

அங்கே...
அலைந்த களைப்பில்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்..
என் கட்டிலில் படுத்து
உறங்கிக் கொண்டிருந்தன
உன் நினைவுகள்!

Thursday, April 8, 2010

பணம்




இருந்தால் தூக்கம் இல்லை

இல்லாவிட்டால் சொந்தம் இல்லை

இரண்டும் இல்லாமல்

இளமையை தொலைத்து

சேர்த்து அனுப்பியும்

தேவையில் பூர்த்தி இல்லை.


தமிழனாய்...

சிலம்பரசன் சேகுவேரா.

Wednesday, April 7, 2010

என்னருகில் நீ…………



என்னருகில்நீஇருந்தபோது என்னையறியாமலே எனக்குள் ஒருதிமிர் இருந்தது என்னையாராலும் அசைக்கமுடியாதென்று.... ஆனால்நீசற்று தூரம் சென்றதும்தான் எனக்கு புரிகிறது நீ என்னருகில் இல்லை என்றால் என்னை அசைத்து விடலாம் என்று.. அன்பே என்னருகில் இரு..நான் நானாக இருக்க.....

தமிழனாய்...

சிலம்பரசன் சேகுவேரா

Friday, March 26, 2010

தாயின் முகம்



தாயின் முகத்தை


முதன் முறையாக


பார்க்க போகிறோம்


என்பதை அறியாமல் அழுகிறது


பிறகும் குழந்தை

Thursday, March 25, 2010

எனது கிறுக்கல்கள்

உன்னோடு .....

உன்னோடு
பேசிய பிறகு...

யாரோடும்
பேச பிடிக்கவில்லை..

நீ பேசியபின்தான்
தமிழ்...

கன்னித்தமிழானது..!

உதவி

தனிமையில் கிடந்து
தத்தளிக்கிறேன்...
எப்பொழுதாவது
உதவி கரம்
நீட்ட வருகிறது
உன் நினைவு...!!

உன் கண்கள்

உன் கண்களைக் கண்டால்
மீன் என்று சொன்னவர் யார்?
அவை என் ஊள்ளத்தைப்
பிடித்திழுக்கும் கொக்கியல்லவா?


அழகு

எனக்கும் சேர்த்து அழகாய் இருக்கிறாய் நீ!
உனக்கும் சேர்த்து அன்பாய் இருக்கிறேன் நான்!

கடைசி சந்திப்பு

நேரில் பார்த்து பேசாத
நாட்களை விடவும்,..

உன்னுடன் நெருங்கி
பழகிய,
சொல்லாதவைகளை
விடவும்,..

நீ என்னைவிட்டு
பிரிந்து சென்ற
'கடைசி சந்திப்பு'
கொடுமையானது,..

Sunday, March 21, 2010

முளைக்கும் காதல்..!

புதைத்து தான் பார்த்தேன்...
என் மனமென்ற கல்லறையில்
உன் இனிய நினைவுகளை..!
அது காதலாய் முளைத்து,
கண்டபடி வளர்ந்து நிற்குமென்று

கனவிலும் எண்ணவில்லை..!

Saturday, March 20, 2010

வருந்துகிறேன் !!

என் வாழ்நாள் குறைகிறது
என்பதற்காக வருந்தவில்லை...
உன் நினைவில்
வாழும் நாள் குறைகிறது
என்பதற்காக வருந்துகிறேன்... !!!