காணிக்கைக் கேட்காத
கண் கண்ட கடவுள்
அம்மா
நடமாடும்
தெய்வம்
அம்மா
கருவறை உள்ள
கடவுள்
அம்மா
உயிர் தந்த உயிர்
உயிர் வளர்த்த உயிர்
அம்மா
மனதில் அழியாத ஓவியம்
மறக்க முடியாத காவியம்
அம்மா
ஆடுகளும் மாடுகளும் கூட
உச்சரிக்கும் உயர்ந்த சொல்
அம்மா
வாய் பேசாத ஜீவன்களும்
பேசிடும் ஒரே சொல்
அம்மா
மகனின் வாழ்வு ஒளிர்ந்திட
உருகிடும் மெழுகு
அம்மா
உச்சங்களின் உச்சம்
உலகின் உச்சம்
அம்மா
அன்பின் சின்னம்
அமைதியின் திரு உருவம்
அம்மா
திசைக் காட்டும்
கலங்கரை விளக்கம்
அம்மா
கரை சேர்க்கும் தோணி
உயர்த்திடும் ஏணி
அம்மா
நேசம் பாசம் மிக்கவள்
வேசம் அறியாதவள்
அம்மா
Sunday, May 8, 2011
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment