Thursday, March 25, 2010

எனது கிறுக்கல்கள்

உன்னோடு .....

உன்னோடு
பேசிய பிறகு...

யாரோடும்
பேச பிடிக்கவில்லை..

நீ பேசியபின்தான்
தமிழ்...

கன்னித்தமிழானது..!

உதவி

தனிமையில் கிடந்து
தத்தளிக்கிறேன்...
எப்பொழுதாவது
உதவி கரம்
நீட்ட வருகிறது
உன் நினைவு...!!

உன் கண்கள்

உன் கண்களைக் கண்டால்
மீன் என்று சொன்னவர் யார்?
அவை என் ஊள்ளத்தைப்
பிடித்திழுக்கும் கொக்கியல்லவா?


அழகு

எனக்கும் சேர்த்து அழகாய் இருக்கிறாய் நீ!
உனக்கும் சேர்த்து அன்பாய் இருக்கிறேன் நான்!

கடைசி சந்திப்பு

நேரில் பார்த்து பேசாத
நாட்களை விடவும்,..

உன்னுடன் நெருங்கி
பழகிய,
சொல்லாதவைகளை
விடவும்,..

நீ என்னைவிட்டு
பிரிந்து சென்ற
'கடைசி சந்திப்பு'
கொடுமையானது,..

0 comments:

Post a Comment