Monday, March 22, 2010

நலமுடன் இருப்பதாக பிரபாகரன், பொட்டு அம்மான் கடிதம்.



நாங்கள் நல்ல உடல் நலத்துடன் பத்திரமாக இருக்கிறோம் என்று விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் , அதன் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் ஆகியோர் பெயரில் உலகம் முழுக்க உள்ள புலி ஆதரவாளர்களுக்கு கடிதங்கள் வர ஆரம்பித்துள்ளன.

கடந்த மே மாதம் 18ம் தேதி நடந்த சண்டையில் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் கூறியது, வீடியோ பசத்தையும் காட்டியது.

ஆனால், அது பிரபாகரன் போலவே உருவ அமைப்பு கொண்ட ஒருவரது உடல் என்று புலிகள் தரப்பு மறுத்தது.

இந் நிலையில் கடந்த ஜனவரி மாதம் விடுதலைப் புலிகள் தங்கள் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில், பிரபாகரன் நல்ல உடல் நலத்துடன், பாதுகாப்பான இடத்தில் இருக்கிறார். உரிய நேரத்தில் அவர் வெளியில் வருவார் என்று அறிவிப்பு வெளியிட்டது.

பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்ற சர்ச்சை உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் புலிகளின் உளவுப் பிரிவுத் தலைவரான பொட்டு அம்மான் குறித்து தொடக்கம் முதலே உறுதியான தகவல்கள் இல்லை.

பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறார் என்று அவ்வப்போது தகவல்கள் பரவி வருகின்றன. இன்டர்போலும் பொட்டு அம்மானை தேடி வருவதாக இணையத் தளத்தில் அறிவித்துள்ளது. இது புலித் தலைவர்கள் அனைவரையும் கொன்று விட்டோம் என்று கூறி வரும் சிங்கள அரசுக்கு தலைவலியைக் கொடுத்துள்ளது.

இதையடுத்து பொட்டு அம்மான் குறித்து நீண்ட அமைதி காத்து வந்த இலங்கை, போரின் கடைசி நாட்களில் அவர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டார் என்று சமீபத்தில் அறிவித்தது.

இந் நிலையில் நாங்கள் நல்ல உடல் நலத்துடன் பத்திரமாக இருக்கிறோம் என்று பிரபாகரன், பொட்டு அம்மான் பெயரில் உலகம் முழுக்க உள்ள புலி ஆதரவாளர்களுக்கு கடிதங்கள் வர ஆரம்பித்துள்ளன.

அத்தகைய ஒரு கடிதம் தமிழக அரசியல் தலைவர் உள்பட 5 பேருக்கு வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதை அவர்கள் தான் எழுதினார்களா அல்லது அவர்கள் பெயரில் வேறு யாராவது அனுப்பினார்களா என்பது தெரியவில்லை.
நன்றி: http://thatstamil.oneindia.in/news/2010/03/22/we-are-alive-prabhakaran-pottu.html

0 comments:

Post a Comment