Sunday, March 21, 2010

கவிதை சொல்ல........



இந்த கண்ணீர்
எனக்கானதா?
என்
பணப்பைக்கானதா?
எனை பற்றியே
சிந்திப்பதாய் சொல்கிறாய்!
வந்தவுடன் ஐஸ்கிரீம் கடைக்கல்லவா
இழுக்கிறாய்?
சோகமாய் முகத்தை
வைத்துகொண்டு
எப்போதும்
அழுதே சாதித்துவிடுகிறாய்!
புதுப்பட டிக்கெட்டையும்
பாப்கார்ன் கோப்பையையும்
இதழ்திறந்து
உன் இதயம் திறந்தாய்!
பூக்கள் வாங்கியே
என் தனம் துறந்தேன்.

0 comments:

Post a Comment