Monday, September 13, 2010

காதல் கவிதைகள்

மாற்றங்கள்



ஒருவனை நேசித்து
அவனுக்காக உயிரையும் துறந்தது
அன்றைய காவியக்காதல்
ஒருவனை நேசித்துக் கொண்டு
இன்னொருவனுடன் skype இல்
கடலை போடுவது
இன்றைய கன்றாவிக் காதல்
காதலுகாக காவியம் படைத்தது.

கண்ணீர் எங்கே........



பேசாமல் நீ பிரிந்து போய்விட்டாய்
மனம் கூசாமல் காதலை மறந்திட்டாய்
தூக்கம் தொலைந்து
படுக்கை விறகானது
பார்வையில் அடுப்பு எரிகிறது
இவை எல்லாம் இருக்கும்
இடமாவது தெரிகிறது
ஆனால்...........

கோலம்...



அவள் போட்ட "கோலத்தை" விட
அழகாக இருந்தது
அதைச் சுற்றி பதிந்திருந்த
அவளது "பாதச்சுவடுகள்"...

முயலவில்லையடி..




என்னை விட்டுவிடு என்று
நீ சொன்ன அன்றே என்
உயிரை விட்டிருப்பேன்..
ஆனாலும் முயலவில்லையடி..
உன் நினைவுகளை
என் இதயம்
இழக்க‌
இசையாததால்..

இன்னொருவன்....



பனியில் வளர்ந்த ரோஜா
பவனி வந்தாள் வீதீயிலே........!
தினந்தோரும் காத்திருந்தேன்
திரும்பி திரும்பி பார்த்திருந்தேன்
திரும்பி பார்ப்பாள் என்று
காலமும் கடந்து போனது
காதலும் வாடி போனது.

தமிழனாய்...

சிலம்பரசன் சேகுவேரா...

0 comments:

Post a Comment