Sunday, April 11, 2010

நட்பு கவிதை



தொடரும் நம் நட்பு

அறிமுகம் இல்லாமல் வந்தோம்.....
அடிக்கடி பேசிக் கொண்டோம்....
உறவுகளுக்கு மேலே நட்பு ஆனோம்...
காலங்கள் கடந்து சென்றாலும்
கடைசிவரை தொடரும் நம் நட்பு....


உதிரா நட்பு

உலகில் பூக்கும் பூவெல்லாம் உதிரலாம் - ஆனால்
நம் நட்பு என்றும் உதிராது.


நட்பை நேசி

வாழ்க்கையில் சந்தோஷம் வேண்டுமென்றால்
காதலை நேசி... ஆனால்,
சந்தோஷமே வாழ்க்கையாக வேண்டுமென்றால்
நட்பை நேசி....


நட்பு சிறை

உன் நட்பு என்னும் சிறையில் சிக்கி கொண்டேன்.
தவறுகள் செய்தால் தண்டித்து விடு
ஆனால்
விடுதலை மட்டும் செய்துவிடாதே.


நட்பென்பது

நட்பென்பது ஊசலாடும் உறவல்ல ..
உயிரோட்டமுள்ள உணர்வு....


காதலர்கள் & நண்பர்கள்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள்
ஆனால்
இதயத்தையே இடமாக கொடுப்பவர்கள் நண்பர்கள்.

0 comments:

Post a Comment